அம்மாவின் மடியோ...
அப்பாவின் தோளோ...
அண்ணாவின் அன்போ...
தம்பியின் வம்போ...
தாத்தாவின் இதமோ...
பாட்டியின் பதமோ....
அத்தையின் செல்லமோ....
மாமாவின் கொஞ்சலோ....
எதுவாயினும்
ஏற்பது அமைதியான புன்னகையில்
மறுப்பது ஆராவார அழுகையில்.....
ஒப்பிடுகையில்.....
மழலையும் சுகம்தாம்....
வளர்ந்தபின் ஒப்பிடுகையில்......
No comments:
Post a Comment